செங்கல்பட்டில் 10 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு..!
செங்கல்பட்டு அருகே அதிகாலையில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். செங்கல்பட்டை மையமாக கொண்டு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.
பெருமழையை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். நிலஅதிர்வில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் தற்சமயத்திற்கு பதிவாகவில்லை.






