கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை ஏப்ரல் 25ஆம் தேதி தொடக்கம்..!
கேரள மாநிலத்துக்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 25ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக வந்தே பாரத் ரயில் தனது இரண்டாவது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம் விரைந்த ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.






