--- --:--:-- --

நான் தற்கொலை செய்து இறந்தால் அதற்கு இவர்கள் தான் காரணம் – நடிகையின் கடிதம்

12

தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை பாயல் கோஷ். இவரைப் பற்றி அடிக்கடி ஏதாவது செய்தி வந்த வண்ணம் உள்ளது. இவர் கடந்த 2020ம் ஆண்டு பிரபல பாலிவுட் பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கிளப்பினார்.

 

ஆனால் அவரோ நடிகையின் புகாரை மறுத்திருந்தார். இந்த நிலையில் நடிகை பாயல் கோஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான கடிதத்தை பதிவு செய்துள்ளார்.

 

அதில் அவர், திடீரென நான் தற்கொலை செய்து கொண்டு இறந்தாலோ அல்லது எனக்கு மாரடைப்பு ஏற்பட்டாலோ அதற்கு இவங்க தான் காரணம் என யார் பெயரையும் குறிப்பிடாமல் யாரையோ எச்சரிக்கும் விதமாக ஒரு துண்டு சீட்டு கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் பாயல் கோஷ்.

 

இதைப்பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக நீங்கள் ஏதாவது மருத்துவரை சந்திப்பது அவசியம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Right Menu Icon