திடீரென வீடுகளுக்குள் புகுந்து பெண்களை தாக்க முயன்ற வட மாநிலத்தவர்..!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் பீகாரைச் சேர்ந்த நபர் வீடுகளுக்குள் புகுந்து பெண்களை தாக்க முயன்றுள்ளார். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது கற்களை எரிந்து தாக்கியுள்ளார்.
இதனால் அந்த பகுதி மக்கள் அசோக்கை தாக்கி கட்டி வைத்துள்ளனர். இதன் பின்னர் அசோக்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






