கரூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
கரூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காற்றுடன் கனமழை பெய்தது. குளித்தலை, ஆரங்குறிச்சி, மாயனூர், பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்த நிலையை நேற்று கன மழை பெய்தது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.






