--- --:--:-- --

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவில் இன்று தீர்ப்பு..!

2

திமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவில் உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது. இன்று நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த மனுவில் விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எனவும் பொதுக்குழு செயற்குழுவை கூட்டி எந்தவிதமான அதிகாரங்களையும் கூட்டுவதற்கு உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் எனவே இந்த பொதுக்குழுபொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இந்த வழக்கில் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon