சென்னையில் 93 கிலோ போதை பொருள் பறிமுதல்..!
சென்னையில் 23 கோடி மதிப்பிலான 93 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறையை கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் தமிழகத்தில் போதை பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
சென்னையில் 23 கோடி மதிப்பிலான 93 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர்களிடம் இருந்து 97 கிலோ வேதிப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 50,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூடுதல் டிஜேபி மகேஷ் குமார் தெரிவித்தார்.





