முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகாவை நாங்கள் போட்டியாளராகப் பார்க்கிறோம் – தெலங்கானா அமைச்சர்
முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகாவை ஹைதராபாத் ஒரு “வலுவான போட்டியாளராக” கருதுகிறது என்றும், முதலீட்டாளர்கள் இறுதியில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியை விட, திறமை, உள்கட்டமைப்பு மற்றும் தொழில் செய்வதற்கான எளிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இடங்களைத் தேர்வு செய்கிறார்கள் என்றும் தெலங்கானா தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி. ஸ்ரீதர் பாபு தெரிவித்துள்ளார்.
நியூஸ்18-இன் ரைசிங் பாரத் இந்தியா உச்சிமாநாட்டில் தெலங்கானா தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி. ஸ்ரீதர் பாபு பங்கேற்றார். இதில் ஸ்ரீதர் பாபு, “கர்நாடகாவை ஒரு வலுவான போட்டியாளராக நாங்கள் பார்க்கிறோம். பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, வெவ்வேறு மாநிலங்களில் கிடைக்கும் நிலம், திறமை மற்றும் உள்கட்டமைப்பைக் கண்டறிகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், உலகளாவிய தொழில்களுக்குப் பணியாளர்களைத் தயார்படுத்துவதற்காக, கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக தெலங்கானா அரசு திறமை உருவாக்கத்தில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
குறிப்பாக வெளிவட்டச் சாலையானது ஹைதராபாத் முழுவதும் 40 முதல் 50 நிமிடங்களுக்குள் இணைப்பை சாத்தியமாக்குகிறது என்றும், அதே நேரத்தில் மாநிலத்தின் தொலைதூர கிராமங்களுக்கு ஒளியிழை இணைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




