கரூர் இடைத்தேர்தலில் பணியாற்றுவதைத் தடுக்க திட்டம்..!
எம்.எல்.ஏ பேரம் தொடர்பான வழக்கில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் அதிரடி வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. கரூர் இடைத்தேர்தலில் அவர் பணியாற்றுவதைத் தடுப்பதற்காகவே திட்டமிட்டு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவரது தரப்பு வழக்கறிஞர்கள், யாருக்கும் எந்தவொரு பணமும் வழங்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் சட்டம் மற்றும் உண்மைக்கு மதிப்பளித்து எந்நேரமும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




