தவறான சமூக ஊடகப் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ரயில்வே எச்சரிக்கை
உரிய அனுமதியின்றி ரயில்வே வளாகத்தில் வ்லாக்ஸ், வீடியோ பதிவு, புகைப்படம் எடுப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வேக்கு எதிராக தவறான, அவதூறு கருத்துகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக ஊடகப் படைப்பாளிகள் மற்றும் பொதுமக்கள் ரயில்வே வளாகத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




