திருப்பூரில் 4 சிலிண்டர்கள் வெடித்து விபத்து – நகைகளை கண்ணீருடன் தேடிய மக்கள்
திருப்பூர், கள்ளம்பாளையத்தில் நேற்று திடீரென 4 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் ஏற்பட்ட தீவிபத்தில் 42 தகர செட் வீடுகள் எரிந்து சாம்பலாகின.
அப்போது, அங்கு ஒருவரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின், வீட்டில் இருந்த தங்க நகை கிடைக்குமா என அப்பகுதி மக்கள் தேடினர்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





