பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலுக்கு இரவோடு இரவாக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாக நடிகையும் பாஜக MP-யுமான கங்கனா ரணாவத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நமது வான் பாதுகாப்பு அமைப்பான ‘S-400 சுதர்சன் சக்ரா’, பாகிஸ்தானின் வான் தாக்குதலை அழித்துள்ளதாக சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அவர், இந்த கடினமான நேரத்தில் ஜம்மு வலுவாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.