அனுப்பர்பாளையத்தில் ஸ்ரீ கந்தன் வள்ளி கும்மி குழுவின் அரங்கேற்ற விழா!

னுப்பர்பாளையத்தில் ஸ்ரீ கந்தன் வள்ளி கும்மி குழுவின் அரங்கேற்ற விழா மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி தொடக்கி வைத்தார். திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையம் ஸ்ரீ கந்தன் வள்ளி கும்மி குழுவின் அரங்கேற்ற விழா அனுப்பர்பாளையம், ஆத்துபாளையம் ரோடு, காயத்ரி நகரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அருகில் உள்ள வளாகத்தில் நடந்தது.

 

விழாவிற்கு செளந்தர்ராஜன் தலைமை தாங்கினார். கந்தசாமி, பாலசுப்பிரமணியம், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தண்டபாணி அனைவரையும் வரவேற்றார். ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு செல்வி, திருப்பூர் மாநகராட்சி 10 வது வார்டு கவுன்சிலர் பிரேமலதா கோட்டாபாலு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி அரங்கேற்று விழாவை தொடக்கி வைத்தார். கொங்கு பண்பாட்டு மையம், மாநில கலை இலக்கிய அணி தலைவர் ஆதன். பொன். செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். இதனை தொடர்ந்து வள்ளி கும்மியில் கின்னஸ் சாதனை படைத்த ஆசிரியர்கள் சோமனூர் பெரியசாமி, காளீஸ்வரன், கோம்பக்காடு கலையரசி ஆகியோர் மேற்பார்வையில் அப்பகுதியில் சேர்ந்த உடையார் வகுப்பைச் சேர்ந்த 100க்கும்  மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடினர். முடிவில் பூபதி நன்றி கூறினார்.

 

சாந்தி பிரிண்டில் உரிமையாளர் திருமூர்த்தி நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். விழாவில் வேலுச்சாமி, குமார், சுப்பிரமணியம், நடராஜ் உள்பட ஊர்பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு வள்ளி கும்மி நடனத்தை ரசித்து பார்த்தனர்.