மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை இறுதிப்போட்டியின் நடுவே இரு அணியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கோகோ இறுதி போட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
கோவை – சென்னை அணிகள் இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது நடுவர்கள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி கோவை அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரு அணி வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட மோதலில் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதலிடத்தை பிடித்த சென்னை அணியினர் பரிசுகளை பெற்ற பொழுது கோவை மகளிர் அணியை சேர்ந்த வீராங்கனைகள் முழக்கங்களை எழுப்பியதால் குழப்பம் ஏற்பட்டது.
மேலும் செய்திகள் :
இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு ரூ.1.62 கோடி மோசடி
இந்தியா - இங்கிலாந்து மோதும் 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
14 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்த டிரம்ப்
நிர்வாகிகள் மதிப்பதில்லை என புலம்பிய நயினார் நாகேந்திரன்
மேக்னஸ் கார்ல்ஸனை மீண்டும் தோற்கடித்து குகேஷ் அசத்தல்!
தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகள் தரம் உயர்வு - அரசு உத்தரவு