ஈஸ்டர் தீவில் பயங்கர நிலநடுக்கம்..!
ஈஸ்டர் தீவில் பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் தென்கிழக்கில் அமைந்துள்ள ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





