திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இளைஞரை திருமணம் செய்து பணமோசடி செய்த பெண் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாராபுரத்தை சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவருக்கு ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா என்பவர் ஒரு செயலி மூலம் அறிமுகமாகியுள்ளார்.
தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மாதம் தொப்பம்பட்டியில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்க்கு பிறகு பல ஆண்களுடன் சத்யா நெருக்கமாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே வீட்டிலிருந்து சத்யா திடீரென மாயமாகியுள்ளார்.
12 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்டு அவர் தப்பிக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட இளைஞர் புகார் அளித்துள்ளார், இதன் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காணாமல் போன சத்யாவை தேடி பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
கொடைக்கானல் கடைகளில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்..!
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம்.. தி.மு.க மக்களவையில் இருந்து வெளிநடப்பு..!
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்பி வழங்காதவர்களுக்கான வாய்ப்பு..!
மகளிர் உரிமைத் தொகை ஃபைனல் லிஸ்ட்!






