அவசர ஊர்தி போனாலே பயமா இருக்கு.. உள்ளே எத்தனை கோடி போகுதோ.. – சீமான்

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மணிவாசகம் சிதம்பரம் வேட்பாளர் ஜான்சி ராணி, பெரம்பலூர் வேட்பாளர் தேன்மொழி ஆகியோரை ஆதரித்து கடலூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓராண்டுக்கு முன்பே சிலிண்டர் விலையை குறைத்தால் அதுவே மக்கள் அரசியல். அதுவே தேர்தல் நேரத்தில் விலை குறைத்தால் தேர்தல் அரசியல் என விமர்சனம் செய்தார்.

 

அவசர ஊர்தி போனாலே பயமாருக்கு.. உள்ள எத்தனை கோடி போகுதோ என விமர்சனம் செய்துள்ளார். ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணம் கடத்தப்படுவதாக அவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.