பாலக்கோடு காவல் நிலையம் முன்பு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா மற்றும் அதிமுக வேட்பாளர் அசோகன் ஆகியோர் பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு காவல் நிலையம் முன்புள்ள சாலையில் இரு வேட்பாளர்களும் வாகனத்தில் வந்த பொழுது தொண்டர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் நாம் தமிழர் கட்சித் தொண்டர் மூன்று பேர் தாக்கப்பட்டதுடன் பிரச்சார வாகனத்தில் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதனால் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் நடுரோட்டில் மோதிக்கொண்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி களைய வைத்தனர். காவல் நிலையம் முன்பு நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள் :
திருமணமாகாத விரக்தி..தாய், தந்தை, மகன் தற்கொலை..!
நடிகர் சங்க கட்டிடம்.. நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி..!
தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்.. உயிருக்கு போராடிய சிறுவன் உயிரை காத்த மருத்துவர்கள்..!
முகநூலில் மலர்ந்த காதல்.. திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்..!
டிராக்டர் மீது லாரி மோதி 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!
கணவனின் மன்னிக்க முடியாத குற்றத்தால் மகனை பார்க்க விடாமல் பூட்டிய மனைவி..!