ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் கடந்த 13ஆம் தேதி திருச்செங்கோட்டு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோகிலவாணி என்ற 25 வயது இளம் பெண் தன்னுடைய மூன்று வயது மகளுடன் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை கோகிலவாணி தங்கி அருகில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்து லாட்டரி மேலாளர் பவானி போலீசில் உடனடியாக புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பவானி போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். உள்ளே கோகிலவாணி மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். மேலும் குழந்தையும் படுக்கையில் சடலமாக கிடந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோகிலவாணியின் கணவர் சசிதரன் இறந்து ஒரு வருடமான நிலையில் தனிமையில் தவித்துள்ளார் கோகிலவாணி. பின்னர் திருச்செங்கோட்டில் உள்ள தாய் யசோதா வீட்டில் வசித்த கோகிலா வாணி அங்குள்ள எண்ணெய் மில்லில் வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன் தாயுடன் சண்டை ஏற்பட்டதால் கோகிலவாணி லாட்ஜில் தங்கி குழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. கணவர் இறந்த பிறகு வாழ்க்கையை வெறுத்த இளம் பெண் தற்கொலை..!

ரோடு மாவட்டம் பவானி பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் கடந்த 13ஆம் தேதி திருச்செங்கோட்டு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோகிலவாணி என்ற 25 வயது இளம் பெண் தன்னுடைய மூன்று வயது மகளுடன் தங்கியுள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று மாலை கோகிலவாணி தங்கி அருகில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்து லாட்டரி மேலாளர் பவானி போலீசில் உடனடியாக புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பவானி போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

 

உள்ளே கோகிலவாணி மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். மேலும் குழந்தையும் படுக்கையில் சடலமாக கிடந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோகிலவாணியின் கணவர் சசிதரன் இறந்து ஒரு வருடமான நிலையில் தனிமையில் தவித்துள்ளார் கோகிலவாணி.

 

பின்னர் திருச்செங்கோட்டில் உள்ள தாய் யசோதா வீட்டில் வசித்த கோகிலா வாணி அங்குள்ள எண்ணெய் மில்லில் வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன் தாயுடன் சண்டை ஏற்பட்டதால் கோகிலவாணி லாட்ஜில் தங்கி குழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.