இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும்..!
தமிழகத்தில் இன்றும். நாளையும் தொடர்ந்து வறண்ட வானிலே நிலவும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





