டாக்ஸியில் பயணம் செய்த பெண்ணிடம் ஆபாசமாக பேசிய டாக்சி ஓட்டுநர் கைது..!
திருப்பூரில் டாக்ஸியில் பயணம் செய்த பெண்ணை ஆபாசமாக பேசிய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். ராயபுரம் பகுதியை சேர்ந்த 29 வயதான பெண் அழகு கலை பயிற்சி நிலையத்திற்கு பயணித்துள்ளார்.
அப்பொழுது பெண்ணிடம் டாக்ஸி ஓட்டுனர் ஆபாசமாக பேசியதாகவும் அவரிடம் தொலைபேசி எண்ணை கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் டாக்ஸி ஓட்டுனர் அஜித்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் நபரின் காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





