நெல்லை மாவட்டம் பாலாமடையில் காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கும் முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் நர்சிங் படித்து வந்த அருணா விடுமுறைக்கு சொந்த ஊர் வந்த நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். தாய் ஆறுமுக கனியும் வாயில் நுரை தள்ளிய நிலையில் அருகில் கிடந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விசாரணையில் அருணா படித்து வந்த கல்லூரியில் ஒரு இளைஞரை காதலித்து வந்ததாக தகவல் தெரிய வந்துள்ளது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
காதலை கைவிட மறுத்ததால் அருணாவின் கழுத்தை நிறைத்து தாய் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மகளை கொலை செய்துவிட்டு தாயின் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள் :
ஏடிஎம் ஷட்டரில் பாய்ந்த ஷாக்..!
கால் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணை தர தரவென இழுத்துச் சென்று கத்தியால் குத்திய இளைஞர்..!
நானும் இறந்து விட்டேன் என விஜய் ஆண்டனியின் உருக்கமான வார்த்தைகள்..!
23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி..!
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு..!