கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!
கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.
உபரி நீர் அந்தியூர் பேரூராட்சி தெப்பக்குளம் வீதியில் புகுந்தது. கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்தியூர் தனித்தீவாக மாறியுள்ள நிலையில் கனமழை காரணமாக அந்தியூரில் இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





