இரும்பு ஹெல்மெட்டை திருடிச்சென்ற திருடன்..!

புதுச்சேரி கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள போர்வீரர்களுக்கு துப்பாக்கி மீது வைக்கப்பட்டிருந்த இரும்பு ஹெல்மெட் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலையில் தலைமை செயலகம் அருகே போர்வீரர் நினைவிடம் உள்ளது.

 

இந்த நினைவுத் தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மேல் இரும்பு ஹெல்மட் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை துப்பாக்கியின் மேலிருந்த இரும்பு ஹெல்மெட் காணாமல் போயிருந்ததை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

 

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இரும்பு ஹெல்மட்டை மர்ம ஆசாமிகள் யாரோ திருடி சென்று இருப்பது தெரியவந்தது. தலைமை செயலகத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.