புதுச்சேரி கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள போர்வீரர்களுக்கு துப்பாக்கி மீது வைக்கப்பட்டிருந்த இரும்பு ஹெல்மெட் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலையில் தலைமை செயலகம் அருகே போர்வீரர் நினைவிடம் உள்ளது.
இந்த நினைவுத் தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மேல் இரும்பு ஹெல்மட் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை துப்பாக்கியின் மேலிருந்த இரும்பு ஹெல்மெட் காணாமல் போயிருந்ததை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இரும்பு ஹெல்மட்டை மர்ம ஆசாமிகள் யாரோ திருடி சென்று இருப்பது தெரியவந்தது. தலைமை செயலகத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் :
புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து சுயேட்சை வேட்பாளர் தர்ணா..!
102 தொகுதிகள்.. 1625 வேட்பாளர்கள்.. நாளை வாக்குப்பதிவின் முக்கிய தகவல்கள்!
மகன் முன்பு தந்தையை தாக்கிய காவல்துறை..!
லாரியின் அடியில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரம்..!
நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்..!
ரயிலில் நாகப் பாம்பு..கடித்ததால் அதிர்ச்சி..!