--- --:--:-- --

ஆஸ்திரேலியாவில் பெய்த தொடர் மழை..! வெள்ளத்தில் சிக்கியுள்ள சிட்னி நகரம்..!

7

ஸ்திரேலியாவில் பெய்த தொடர் மழையால் சிட்னி நகரம் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. 18 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். அந்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மிக அதிக அளவில் பெய்த மழையால் சிட்னி உள்ளிட்ட ஊர்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

 

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்கிறது. சிட்னி அருகே உள்ள பாலனை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் 18 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்து உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon