9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த 14 வயது சிறுவன்!

திருச்சி மணப்பாறை அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அது கொலையில் முடிந்துள்ளது. இந்த காரியத்தை செய்த 14 வயது சிறுவனின் பகீர் வாக்குமூலம் என்ன? யூடியூப் பார்த்து வக்கிரமான சிறுவன் தனது உறவினரான 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற படுகொலை செய்துள்ளார்.

 

சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தின் பின்னணி என்ன? திருச்சி மணப்பாறை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் 9 வயதான சிறுமி. அங்கே அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு செல்ல காத்திருந்தார், அவரது வீட்டருகே உறவினரான 14 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுவனும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு செல்ல காத்திருந்தான்.

 

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சிறுவனும், சிறுமியும் சிறுவனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். பிற்பகல் 2 மணியளவில் சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள காடு பகுதிக்கு சென்று உள்ளார். சிறிது நேரம் கழித்து சிறுமி மல்லி தோட்டத்தில் இறந்து கிடப்பதை சிறுமியின் தாத்தாவிடம் 14 வயது சிறுவன் பதற்றத்துடன் கூறியுள்ளான்.

 

அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் நடந்த இடத்தில் 14 வயது சிறுவன் அணியும் பள்ளி சீருடையான ஒரு கால் சட்டை கிடந்துள்ளது . மேலும் ரத்தக் கறை படிந்த கல் சிறுமியின் ஹேர்பேண்ட் துணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

 

போலீசாரின் சந்தேகம், தகவல் அளித்த 14 வயது சிறுவன் மீது விழுந்தது. விசாரணையில் அந்த கால்சட்டை தனது இல்லை என சிறுவன் மறுத்த நிலையில் சிறுவன் உடையதுதான் என சிறுவனின் தந்தை உறுதிப்படுத்தினார். இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இந்நிலையில் மல்லி தோட்டத்தின் ஒரு பகுதியில் பூமியில் புதைத்து வைத்திருந்த சட்டையை எடுத்து கொடுத்தான் சிறுவன்.

 

பின்னர் அவரது வீட்டில் சோதனையிட்டபோது பள்ளி சீருடைகள், ஒரு கால் சட்டை குறைந்தது உறுதியானது. போலீசார் அவரிடம் விசாரித்ததில் பல தகவல்கள் வெளியாகின. சிறுவன் தனது தந்தையின் செல்போனை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். நண்பர்களின் அறிமுகத்தால் யூடியூப் உள்ளிட்டவற்றால் ஆபாச வீடியோக்களை பார்த்து உள்ளார்.

 

சம்பவம் நடந்த அன்று அவன் சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுவனுடன் கடுமையாக போராடிய சிறுமி அவரிடமிருந்து தப்ப முயன்று உள்ளார். மேலும் பெற்றோரிடம் கூறி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். பயந்து போன சிறுவன் சிறுமியை அடித்து கீழே தள்ளி அங்கிருந்த கல்லை எடுத்து சிறுமியின் தலை மீது போட்டுள்ளார் .

 

சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
இதையடுத்து சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் . வீடுகளில் சிறுவர் சிறுமியிடம் செல்போன் கொடுப்பதில் உள்ள பிரச்சனைகளை பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


Leave a Reply