குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு… தமிழினத்துக்கு அதிமுக துரோகம்

குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது தமிழினத்திற்கு செய்த துரோகம் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமலஹாசன் பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

 

விலைவாசி விண்ணை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றார். அனைவரும் கலக்கத்தில் இருக்கும் வேளையில் குடி உரிமை சட்டத்திற்கு அவசரம் என்ன என்கிற கேள்வி இருப்பதாகவும் அதுவே நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.

 

வரலாற்றின் முடிவு எப்போது மக்களின் கையில்தான் இருக்கிறது என கூறியுள்ள கமலஹாசன் தேசவிரோத சக்திகளின் வீழ்ச்சியின் தொடக்கம் என தெரிவித்தார்.


Leave a Reply