ஜார்க்கண்டில் ராகுல் சர்ச்சைக்குரிய வகையில் பேசினாரா? – தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்பு

ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையின் போது சர்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அறிக்கை தரும்படி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையின் போது மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தையும் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதையும் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசினார்.

 

இதற்கு அண்மையில் முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா எம்பிகள் வலியுறுத்தினர். இந்தநிலையில் ராகுல் பேசியது தொடர்பாக அறிக்கை தருமாறு ஜார்கண்ட் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply