ஜவுளி வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பணத்தை திருடிச்சென்ற நபர்கள்

பீஹாரில் ஜவுளி வியாபாரி ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்ற காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. பாட்னாவில் உள்ள பிரபல ஜவுளிக் கடையின் உரிமையாளரும், அவரது பணியாளரும் அன்றாட வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது இரு இளைஞர்கள் திடீரென கடைக்குள் நுழைந்து உரிமையாளரை கண்ணிமைக்கும் நொடியில் சுட்டனர். கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து இருந்த பணியாளியை துப்பாக்கியில் மிரட்டி விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு பாட்னா காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


Leave a Reply