மேட்டுப்பாளையத்தில் 20 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது எப்படி?

மேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் கருங்கல்லால் கட்டப்பட்டது. அந்தச் சுற்று சுவரின் உயரம் 20 அடி ஆகும். 80 அடி நீளம் கொண்ட அந்த கருங்கல் சுற்றுச் சுவரின் அகலம் 2 அடி ஆகும்.

 

தொடர் மழையின் காரணமாக மூன்று ஆள் உயரம் கொண்ட அந்த சுவரின் ஒரு பகுதி அருகில் இருந்த மண் வீடுகள் மீது அதிகாலை மூன்றே முக்கால் மணி மீது விழுந்தது. அதிக எடை கொண்ட கருங்கல் சுவர் விழுந்ததால் மண்ணால் கட்டப்பட்ட ஓட்டு வீடுகள் தரைமட்டமாகின.

 

கனமழை பெய்து வந்ததாலும் அனைவரும் உறங்கும் நேரம் என்பதாலும் அருகில் இருந்த வீடுகளில் இருப்பவர்களுக்கே விபத்து நடந்து ஒன்றரை மணி நேரம் கழித்துதான் தெரியவந்திருக்கிறது .சுற்றுச்சுவர் விழுந்ததால் தரைமட்டமான அந்த வீடுகளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்தனர்.


Leave a Reply