ஒரே இடத்தில் படப்பிடிப்பின் போது சந்தித்து கொண்ட விஜய் மற்றும் சூர்யா..!
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள ஸ்டுடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் தற்போது உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனால் படப்பிடிப்பு இடைவெளியில் இருவரும் நட்பு ரீதியாக சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது.







