நாளை புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்
நாளை புரட்டாசி நான்காம் சனிக்கிழமை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியுள்ளது.
பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு மேலும் 3 கிலோ மீட்டர் வரை வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.





