இது சமூக வலைதளங்களின் காலம்: ஐஜி அஸ்ரா கார்க்
இது சமூக வலைதளங்களின் காலம் என்பதை போலீஸாரும் உணர்ந்துள்ளோம். மாணவர்கள் முதல், சிறார்கள் ஈடுபாடுள்ள பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிறைய வழக்குகளில், மாணவர்களின் எதிர்காலம் பாதித்துவிடக் கூடாது என பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்கிறோம்.
சிறார் விவகாரங்களில் எல்லாவற்றுக்கும் சட்ட நடவடிக்கையே தீர்வு எனப் போலீஸார் செயல்பட முடியாது.





