மூதாட்டியை தள்ளிவிட்ட காவலர் வைரலான வீடியோ..!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே புகார் மனுவை பெற மறுத்து மூதாட்டியை தள்ளிவிட்ட விவகாரத்தில் காவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
அய்யனார் என்ற மூதாட்டி தனது மகன்கள் சரிவர கவனித்துக் கொள்ளவில்லை எனக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றுள்ளார். அப்பொழுது அங்கு பணியில் இருந்த காவலர் மூதாட்டியிடம் மனுவை வாங்க மறுத்து அவரை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோ வெளியானதையடுத்து யுவராஜ் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.






