13 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்..!
அரசு பள்ளியில் படிக்கும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கருணாகரன்.
பாலியல் தொழில் தொல்லை கொடுத்ததாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. மகளிர் போலீசாருடன் சென்று அதிகாரிகள் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மூன்றாம் வகுப்பு மாணவிகள் எட்டு பேரிடமும் நான்காம் வகுப்பு மாணவிகள் ஐந்து பேரிடமும் ஆசிரியை கருணாகரன் கடந்த நான்கு மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து தெரிய வந்தது. உடனே கருணாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.






