இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விவகாரம்..!
சென்னை பெருங்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது குறித்து கேட்ட வாலிபரை குடும்பமாக சேர்ந்த தாக்கியதாக கூறப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். பிரகாஷ் அலுவலகத்திற்கு வெளியே அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த லக்ஷ்மணன் என்பவர் காரை பின்னோக்கிய இயக்கும் போது இருசக்கர வாகனத்தின் மீது மோதி வாகனம் கீழே விழுந்து சேதமடைந்துள்ளது.
இதனை தட்டி கேட்ட பிரகாஷ் காரில் வந்த குடும்பத்தினர் கூட்டாக சேர்ந்து தாக்கியதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.






