கண்முன்னே சிறுமியை கடத்த முயன்றவனை தாக்கிய தந்தை..!
தென் ஆப்பிரிக்காவில் பெற்றோர் கண்முன்னே சிறுமியை கடத்த முயன்றவன் சிக்கினான். குவாடங் பகுதியில் உள்ள ரூட்டுபூட் என்ற இடத்தில் 4 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது உணவகத்தின் தடுப்புகளை தாண்டி ஓடி வந்த ஒருவன் திடீரென அந்த சிறுமியை தூக்க முயன்றான்.
நொடிப்பொழுதில் அந்த சிறுமியை தாய் இறுகப் பிடித்துக்கொள்ள தந்தையோ குழந்தையை கடத்த முயன்ற அவளை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார்.






