மனநலம் பாதித்த இருவரை மனநல காப்பகத்தில் ஒப்படைத்த ஆட்சியர்..!
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த இருவரை திருப்பத்தூர் ஆட்சியர் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் மன நலம் பாதித்த இருவரையும் தனியார் மனநல காப்பகத்தில் ஆட்சியர் ஒப்படைத்தார்.
இருவரையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் மனநலம் காப்பக நிர்வாகிகள் நிர்வாகத்திடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.






