பள்ளி சமையலறையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து..!
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி பள்ளியில் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருக்கும் சமையலறையை அப்புறப்படுத்த கோரிக்கை வலுத்துள்ளது. நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 2013 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சமையலறை மழை காரணமாக கான்கிரீட் பூச்சு விழுந்து விபத்து ஏற்பட்டது.
விடுமுறை தினம் என்பதால் வெறும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. நகராட்சி ஆணையரகம் கேட்ட பொழுது இடிந்து விழுந்த கட்டிடத்தை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டதாக தெரிவித்தார்.






