10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

மிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அந்த அட்டவணையை அறிவித்தார்.

 

அப்போது பேசிய அவர் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். பத்தாம் வகுப்பு தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி நிறைவடையும் எனவும், பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு ஒன்பதாம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி நிறைவடையும் என்றும் கூறிய அவர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி நிறைவடையும் என குறிப்பிட்டார். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 


10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பா..?

பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 

சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பொதுத்தேர்வுக்கு முன்பு 2 திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தோம், எனவே பொது தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் திறக்க முதலமைச்சரை பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த அறிவுறுத்தல்..!

கொரொனா மூன்றாவது அலை அதிகரித்து வருவதால் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தவிர்த்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

இதுதொடர்பாக நெல்லையை சேர்ந்த ஒரு நபர் தொடுத்த வழக்கில் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார் .

 

ஆகவே அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பள்ளிக்கு அழைக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.

 


11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா..?

திரையரங்குகள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், கடற்கரை பூங்காக்கள் திறப்பு நேரம் அதிகரிப்பு ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில் கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான நெறிமுறைகளில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் செயல்படுவதற்காக புதிய அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

வரும் 12ம் தேதி காலை 6 மணி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கு தளர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.


கொரோனாவால் இன்னும் திறக்கப்படாத பள்ளிகள்…! 10, 11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தா? அமைச்சர் செங்கோட்டையன் சூசக தகவல்!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், இந்தாண்டு 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பொதுத் தேர்வை ஒத்தி வைப்பதா? அல்லது ரத்து செய்வதா? என்பது குறித்து டிசம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அனைவருக்கும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல் பிற வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது மேலும், கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற ஆண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

 

இந்நிலையில், வழக்கமாக ஜுன் மாதத்தில் திறக்கப்பட வேண்டிய 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பும் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. தற்போதைய நிலையில் டிசம்பர் இறுதி வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்றே தெரிகிறது. ஆனாலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. ஆனால் ஆன்லைனில் நடத்தப்படும்
பாடங்கள் மாணவர்களுக்கு புரியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக வே எழுந்துள்ளது.

 

ஆன்லைன் வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்கள் புரியவில்லை எனக் கூறி சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சோகமும் நிகழ்ந்துள்ளது. எனவே வரும் ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், அடுத்த 2, 3 மாதங்களில் பொதுத் தேர்வு, ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதற்குள் பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. அப்படியே அவசரமாக
பொதுத் தேர்வு என்றால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படக் கூடும் என்பதால் தேர்வு நடத்துவதா? அல்லது கடந்த முறை போல இந்த ஆண்டும் தேர்வுகள் ரத்து என அறிவிப்பதா? என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவே தெரிகிறது.

 

இந்நிலையில் கோபியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், பொதுத் தேர்வுகளை மார்ச், ஏப்ரலில் நடத்துவதற்குப் பதிலாக ஓரிரு மாதங்கள் தள்ளிப் போடுவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது பற்றி டிசம்பர் இறுதிக்குள் முடிவெடுக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார்.

 

தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு ஏப்ரல், மே வாக்கில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஜனவரி முதலே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். இதனால் மாணவர்களை பொதுத் தேர்வு என்ற பீதிக்கு ஆளாக்காமல், தேர்வுகள் ரத்து என்ற அறிவிப்பை அரசு வெளியிடும் வாய்ப்புகளே அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


10,11,12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை பள்ளிகளே முடிவு செய்ய உத்தரவிட வேண்டும்..!தமிழக அரசுக்கு ஆசிரியர் நல கூட்டமைப்பு யோசனை!!

12ம் வகுப்பு 11ம் வகுப்பு 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை, காலாண்டு அரையாண்டு தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளே முடிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சூழ்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி அடைய செய்யவேண்டும் என்றும், அதேபோன்று 9 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளில் நடத்திய தேர்வை வைத்து மாணவர்களை தேர்ச்சியடைய செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

இதனை பின்பற்றி தமிழக அரசும் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியையும் வகுப்புகளில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில், அதாவது காலாண்டு அரையாண்டு மற்றும் பயிற்சி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே அறிவிக்கலாம் என்ற உத்தரவை தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.

 

ஏனெனில், 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பாதி தேர்வுகளை கொரோனா வைரஸ் அச்சத்திலேயே தேர்வு எழுதினர். மேலும் நீட் தேர்வில் பங்கு கொள்ளும் மாணவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதால் அதில் எந்த பாதிப்பும் வர வாய்ப்பில்லை.

 

அதே போன்று10 ம் வகுப்பு பொதுத் தேர்வையும் வகுப்புகளில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம் என்ற உத்தரவை கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் நலன் கருதி தமிழக முதல்வர் உத்தரவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன் என சா.அருணன் தெரிவித்துள்ளார்.


சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் முடக்கம் எதிரொலி..! 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு?

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க உத்தரவிடப்பட்ட நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படும் என தெரிகிறது.

 

கொரானா வைரஸ் தாக்கத்தையும் பரவலையும் கட்டுப்படுத்த, இந்த வைரஸ் பாதிப்பு அறிகுறி உறுதி செய்யப்பட்ட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்கி, அங்குள்ள மக்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து அனைத்து பணிகளும் இந்த மாவட்டங்களில் முடங்குகின்றன. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இன்னும் சில பாடங்களின் தேர்வுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த 3 மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுதுவது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் 11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழகம் முழுவதும் ஒத்திவைப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

 

ஏற்கனவே வரும் 27-ந் தேதி முதல் தொடங்குவதாக இருந்த 10-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 14-ந் தேதிக்கு பின்னர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 9-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இந்த வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வு நடத்தாமல் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவும் கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகறது.


10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் முறைகேடா..? தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட தடை!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தான் முறைகேடு என்றால், பள்ளி மாணவர்களுக்கான 10, 11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இந்தாண்டு முதல் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் பொதுத் தேர்வு பணிகளில் ஈடுபட தமிழக கல்வித்துறை தடை விதித்துள்ளது.

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு அம்பலமானது முதல் குரூப் 2 , 2 ஏ, குரூப்1 மட்டுமின்றி காவலர் தேர்வு, ஆசிரியர் தேர்வுகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி தமிழகம் அல்லோகலப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இந்த முறைகேடுகளில் பெரிய புள்ளிகள் சிக்கும் போது பெரும் பூகம்பமே வெடிக்கலாம் என்ற பீதியும் நிலவுகிறது.

 

இந்நிலையில் தான் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும் நடைபெறும் தில்லு முல்லுகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளன. கரூர், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பிரபல தனியார் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைக்க, முறைகேடுகளில் ஈடுபடுவதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.

 

வினாத்தாளை முன்கூட்டியே கைப்பற்றுவது, தேர்வு கண்காணிப்பு பணியில் தங்களுக்கு வேண்டிய தனியார் பள்ளி ஆசிரியர்களை திணித்துவிடுவது, விடைத்தாளை துரத்தி விடை திருத்தும் மையத்திலேயே கைவரிசை காட்டுவது என பல்வேறு வகைகளில் இந்த தில்லுமுல்லுகளை தில்லாக செய்து வந்தனர்.

 

இதனாலேயே இந்தக் குறிப்பிட்ட தனியார் பள்ளிகளின் மாணவர்கள் மாநில ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடிப்பதுடன், மெடிக்கல், இன்ஜினியரிங் கட் ஆஃப் மார்க் கூடுதலாக பெற்று, அந்த இடங்களை பெருமளவில் ஆக்கிரமித்தனர். ஆனால் நீட் தேர்வு முறை வந்தவுடன் மருத்துவ படிப்பில் இவர்களின் பாடு திண்டாட்டமாகி விட்டது. ஆனால் பொதுத் தேர்வில் மார்க்குகளை அள்ளுவது குறையவில்லை.

 

இப்போது டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகள் அம்பலமான நிலையில், தேர்வு முறையில் பல்வேறு கெடுபிடிகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று பள்ளிகளில் நடைபெறும் பொதுத் தேர்விலும் முறைகேட்டை தடுக்க புதிய உத்தரவை பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

 

“இந்தாண்டு 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2 ந் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுகள் நடைபெறும் மையங்களில் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாரையும் தேர்வு கண்காணிப்பு பணி உள்ளிட்ட தேர்வு தொடர்பான பணியில் ஈடுபடுத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.”


10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழக பள்ளி மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, 12ம் வகுப்பு தேர்வுகள் 2020ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. 11ம் வகுப்புதேர்வுகள் 2020ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதியுடன் முடிவடைகிறது.

அதேபோன்று 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் 12ம் வகுப்பிற்கு ஏப்ரல் 24ம் தேதியும், 11ம் வகுப்பிற்கு மே 14ம் தேதியும், 10ம் வகுப்பிற்கு மே மாதம் 4ம் தேதிவெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.