“வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு இன்று 381 வயது..!” ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., வாழ்த்து!!

சென்னப்பட்டினம், மதராச பட்டணம், மதராஸ், மெட்ராஸ் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு இன்று சென்னை என உலகம் முழுக்க அறியப்படும் சென்னை உருவாகி இன்றோடு 381 ஆண்டுகள் ஆகிறது.

 

இதனை சென்னை தினம் என ஆண்டுதோறும் இந்த நாளில் கொண்டாடி தீர்க்கின்றனர் சென்னை வாசிகள் . ஏனெனில் சென்னைக்கு பல பெருமைகள் இருந்தாலும்,வந்தாரை.

 

வாழ வைக்கும் சென்னையில் வசிக்கும் முக்காலே அரைக்கால் வீசம் பேர் புலம் பெயர்ந்தவர்கள் தான் என்றால் மிகையாகாது.

1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி சென்னை உருவானதாக ஆவணங்கள் கூறுகின்றன. சின்னஞ் சிறு கிராமம் போல் இருந்த ஒரு பகுதியை சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து வெள்ளைக்கார துரை ஒருவர் விலைக்கு வாங்கியதாகவும், அந்த இடத்துக்கு சென்னப்ப நாயக்கர் பெயரிலேயே சென்னப்பட்டினம் என பெயர் சூட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. சிறு கிராமமாக இருந்த சென்னப்பட்டினம், பின்னர் மதராசபட்டணம், அப்புறம் மெட்ராஸ் என அழைக்கப்பட்டு 1996-ல் சென்னை என்ற தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது.

 

சென்னையின் அடையாளங்களான பல நூறு ஆண்டுகளைக் கடந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை , ரிப்பன் மாளிகை, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், ராயபுரம், எக்மோர் ரயில் நிலையங்கள் போன்றவை இன்றும் பொழிவு மாறாமல் பழமையை பறை சாற்றுகின்றன.

 

இது போன்று எண்ணற்ற கட்டடங்கள் இன்னும் சென்னைக்கு அடையாளமாக திகழ்கின்றன. இன்று பெரும் மாநகராக உருமாறியுள்ள சென்னை உலகம் அறிந்த நகரமாக திகழும் நிலையில், வந்தாரை வாழ வைத்து, தங்களுக்கு முகவரி கொடுத்த சென்னையை இந்த தினத்தில் ஒவ்வொருவரும் உற்சாகமாக நினைவு கூறி கொண்டாடுகின்றனர்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., வாழ்த்து

இன்று சென்னை தினத்தையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் டுவிட்டரில் சென்னையின் புகழை பறைசாற்றியுள்ளார். அதில், வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381.பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை! என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில், ஆசியாவின் டெட்ராய்ட், மருத்துவ தலைநகர், தொன்மையான மாநகராட்சி என பற்பல பாரம்பரிய பெருமைகள் கொண்ட சென்னையின் 381வது பிறந்த தினம் இன்று!

 

வந்தாரை வாழவைக்கும் நகரமும் பலதரப்பட்ட மக்களின் மானுட சமுத்திரமுமான சென்னை எத்தனை எத்தனை இடர்வரினும் மீண்டு எழும்! மறுமலர்ச்சி பெறும்.. என பதிவிட்டுள்ளார். இதே போன்று சென்னையின் நினைவுகளை பிரபலங்கள் பலரும் உற்காகமாக பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

&


ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அடுத்தடுத்து டெல்லிக்கு படையெடுப்பு ..! காரணம் இதுதானா..?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேற்று டெல்லிக்கு பயணமாகியுள்ளார். ஓ.பி.எஸ்.சின் திடீர் டெல்லி பயணத் திட்டம் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (19-ந்தேதி) டெல்லிக்கு பயணமாக உள்ளார் என்ற அறிவிப்பு கடந்த 4 நாட்களுக்கு முன்னரே வெளியானது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேற்று டெல்லிக்கு பயணமாகியுள்ளார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறும் மாதாந்திர ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திலும், அடுத்தாண்டுக்கான மத்திய பட்ஜெட் தொடர்பான மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்திலும் ஓ.பி.எஸ். பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19-ந் தேதி டெல்லி செல்கிறார் என்ற அறிவிப்பு வெளியான பின்னரே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்லும் திட்டம் திடீரென முடிவானது ஏன் என்பது தான் கோட்டை வட்டாரங்களிலும், அதிமுகவிலும் பரபரப்பாகி, பல்வேறு யூகங்களும் பரவிக் கிடக்கிறது.

இதற்குக் காரணம், மத்திய அமைச்சரவையில் தனது மகன் ஓ.ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவியைப் பெற்று விட ஓ.பி.எஸ்., கடந்த 6 மாதமாகவே தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது அம்முயற்சி ஒரு வழியாக கனிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.வரும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் அவருக்கு அமைச்சர் பதவி கிடைப்பது உறுதி என்றும் கூறப்படுகிறது.

 

ஆனால் ஆரம்பம் முதலே ஓ.பி.எஸ் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் எடப்பாடியும், கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலரும் முட்டுக்கட்டையாக இருந்து வருவது தெரிந்த சங்கதி. இப்போதும் டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி, மத்திய அமைச்சர் பதவிக்கு இடையூறாக இருந்து விடுவாரோ? என்று ஓ.பி.எஸ்.தரப்புக்கு சந்தேகமாம். இதனால் டெல்லி பாஜக தலைவர்களையும், பிரதமர் மோடியையும் சந்திக்கும் திட்டத்துடனே, ஓ.பி.எஸ் திடீரென டெல்லி பயணத் திட்டம் போட்டதாக அதிமுகவில் ஒரு தரப்பினர் கிசுகிசுக்கின்றனர்.


அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 10 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவருடன், அவரது மகனும், தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் சென்றுள்ளார்.

 

அமெரிக்காவின் சிகாகோ நகரத்துக்கு நாளை செல்லும் துணை முதல்வர், சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கிறார். வரும் 10ஆம் தேதி சர்வதேச சமுதாய ஆஸ்கார் 2019’ விழாவில், துணை முதல்வருக்கு விருது அளிக்கப்பட உள்ளது.

 

வாஷிங்டன் டிசி, ஹுஸ்டன், நியூயார்க் நகரங்களில் நடைபெறும பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓ.பி.எஸ். பங்கேற்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 17ஆம் தேதி ஓ.பி.எஸ். தமிழகம் திரும்புகிறார்.

 

அமெரிக்காவுக்கு புறப்படும் முன்பு, கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் ஓ.பி.எஸ். வீட்டிற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது வெளிநாட்டுப் பயணத்துக்காக வாழ்த்து தெரிவித்தார்.

 

அதேபோல், விமான நிலையத்தில் துணை முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. அதிமுக தொண்டர்கள் திரளாக கூடி, துணை முதல்வரை வழி அனுப்பி வைத்தனர்.


வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஓ.பி.எஸ் மருமகள்.!

தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார். இன்று முதல் தனது பிரசாரத்தை துவங்கிய ரவீந்திரநாத்குமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் பிரசாரம் செய்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அதே வேளையில், அவரது மனைவியும், தாயும் அவருக்காக தேனியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி கிராமத்திற்குச் சென்ற அ.தி.மு.க மகளிர் அணியினர் ரவீந்திரநாத்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அவர்களுடன் வந்த, ரவீந்திரநாத்குமாரின் மனைவி ஆனந்தி, தாய் விஜயலெட்சுமி ஆகியோர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். விஜயலெட்சுமி வடபுதுபட்டி கோவில் சாமிகும்பிட்டுவிட்டு சிறிது நேரம் மக்களைச்சந்தித்துப் பேசினார் ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மருமகள் ஐஸ்வர்யா, ஆனந்தியுடன் இணைந்து வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன், பெரியகுளம் (தனி) தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மயில்வேலின் மனைவி உடன் இருந்தார். பெரியகுளம் அ.தி.மு.க ஒன்றியச்செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர். சுமார், 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள், வடபுதுப்பட்டி கிராம பெண்களுடன் தனது கணவனுக்காக மனைவி வாக்கு கேட்டது தேனி அரசியல் களத்தின் கவனம் பெற்றது என்றே சொல்லலாம்