கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தனது கடைகளில் இலவசமாக மசாலா பூரி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சண்டிகரை சேர்ந்த ஒருவர் அறிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக சைக்கிளில் உணவு வியாபாரம் செய்து வருகிறார்.
ஆனால் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இலவசமாக பூரி வழங்கி மன் கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் வாழ்த்தைப் பெற்றார். இந்த நிலையில் நாடு முழுவதும் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர்கள் செலுத்தப்படுகிறது.
இதனை அடுத்து மீண்டும் தனது பழைய யோசனையை செயல்படுத்த தொடங்கியுள்ளார். கொளுத்தும் வெயில் சைக்கிளில் உணவை அளிப்பவரின் செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.