கட்டையால் மாறி மாறி தாக்கி கொண்ட பள்ளி மாணவர்கள்..!
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் கண்மூடித்தனமாக தாக்கி கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி அரியூர் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து செல்லும் பொழுது தங்களுக்குள் தகராறு ஈடுபட்டனர்.
விறகு கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பொழுது ஒரு மாணவன் தாங்கள் அண்ணன் தம்பிகள் அடித்துக் கொள்வோம் என்றும், எதற்கு வீடியோ எடுக்கிறீர்கள் என கேட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.






