பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் படுகொலை..!
கடலூர் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான். கொலை செய்யப்பட்ட ஜீவாவின் உடல் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன் விரோதம் காரணமாக புளியங்குடியைச் சேர்ந்த நபர் ஜீவாவை கத்தியால் குத்தி கொலை செய்த தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





