சிகிச்சையில் இருக்கும் சமந்தா..!
நடிகை சமந்தா தற்போது myositis என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவரது முகம மற்றும் தோற்றமே மாறி இருக்கிறது.
அவரது அழகும் பொலிவும் காணாமல் போய்விட்டது என சிலர் மீம் போட்டு விமர்சித்த நிலையில் சமந்தா அவர்களுக்கு பதில் கொடுத்து ஒரு பதிவும் போட்டிருந்தார். மேலும் சாகுந்தலம் படத்தின் விழாவில் அவர் கண்ணீர் விட்டது ரசிகர்களையும் கலங்கவைத்து இருக்கிறது.
சமந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்து தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். வெளிநாட்டிற்கும் சென்று திரும்பி இருக்கிறார் அவர்.
இந்நிலையில் தற்போது சமந்தா ஆன்மீகத்தின் மீது அதிகம் ஈடுபாடு காட்டுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமந்தா சாகுந்தலம் பட நிகழ்ச்சிக்கு வரும்போது கையில் ஜெப மாலை உடன் தான் வந்தார். அதன் புகைப்படங்களும் முன்பு வைரலானது குறிப்பிடத்தக்கது. விமான நிலையம் வந்த போதும் அவர் அந்த ஜெபமாலையை கையில் வைத்திருந்தார்.






