தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்..!
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை கைது செய்த மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.






