இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் இருக்கும்..!
கொரொனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு மருந்து நிவாரணங்களை வழங்க பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பின் 2வது அலை வேகமெடுத்துள்ள நிலையில் இந்தியாவில் அதன் வேகம் அதிகரித்துள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவும் நோக்கில் மருத்துவ நிவாரணங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் டிஜிட்டல் எந்திரங்கள், பிவிபி பொருட்களை இந்தியாவுக்கு வழங்க பாகிஸ்தான் முடிவு செய்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இருக்கவேண்டுமென பாகிஸ்தான் மக்கள் டுவிட் செய்துள்ளனர்.






