தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி..!
கிருஷ்ணகிரி மாவட்டம் முள்ளம்பட்டியில் தென்னந்தோப்பில் இருந்து பறந்து வந்த மலை தேனீக்கள் திடீரென கொட்டியதில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெரியசாமி என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
தேனீக்கள் கொட்டியதில் தென்னந்தோப்பில் தென்னை மட்டை உரிப்பதற்காக சென்று கொண்டிருந்த மூன்று பேர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.






