புதிய நீதிமன்ற ஊழியர் ஒருவர் நீதிமன்ற அறையில் தூக்கிட்டு தற்கொலை.!
அரியலூரில் புதிய நீதிமன்ற ஊழியர் ஒருவர் நீதிமன்ற அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறப்பு குடும்ப நல நீதிமன்றத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.
கீழ பெரம்பலூரை சேர்ந்த நெடுஞ்செழியன் உயிரிழந்த தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெடுஞ்செழியன் சட்டைப் பையில் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் அதில் எடை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் புற்று நோயாக இருக்குமோ என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.






