அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்..!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது,






